சனி, 31 டிசம்பர், 2011

ஊர் வரலாறு

விருதுநகர் 9. 34’ 10” நிலநேர்கோடு (Longitude) மற்றும் 77.57’25” நிலகுறுக்கு கோட்டிலும் (Latitude ) அமைந்துள்ளது.
விருதுநகரைச் சுற்றி வடக்கில் மதுரையும் (48கி.மீ) தெற்கில் சாத்தூர் (26கி.மீ) மேற்கில் சிவகாசி (26கி.மீ) மேலும் அருப்புக்கோட்டையும்(18கி.மீ) அமைந்துள்ளது.
கடல் மட்டத்திற்கு மேல் 101 மீட்டர் உயரம், சமவெளி பிரதேசம், கரிசல்மண், கருங்கல் மற்றும் சுக்கான் பாறைகள் கொண்ட புவியல் அமைப்பைக் கொண்டது. வெப்பம் மிகுந்த மற்றும் நிலையற்ற மழைத்தன்மையைக் கொண்ட இடமாகும்.
திருத்தங்கலில் கண்டெடுக்கப்பட்ட மீன் பொரித்த நாணயம் பாண்டிய மன்னர்களின் ஆட்சியைக் குறிக்கிறது.  பாண்டிய மன்னர்கள் ஏறத்தாழ 16ஆம் நூற்றாண்டு வரை ஆண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது புங்க நாடு என்று அழைக்கப்பட்டது.
இடையில் சிறிது காலம் சோழர்களின் கீழ் மதுராந்தக நாடாகவும் (கி.பி.985-கி.பி.1205) கூறப்படுகிறது.
பிற்கால பாண்டியர் ஆட்சியின் போது செங்குடி நாடாக அழைக்கப்பட்டது. (கி.பி.1266- 1345)
நாயக்கர் ஆட்சியின் கீழ் சிறிது காலம் இருந்துள்ளது. எரிச்சநத்தம் - விருதுநகர் சாலை, மங்கம்மாள் சாலை என்று இன்றும் அழைக்கப்படுகிறது.
கயிறு திரிக்கும் சலுப்பர்கள் இருந்தமையால் சலுப்பப்பட்டி என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
வடக்கே இருந்து வந்த வீரனோடு போரிட்டு, வெற்றி பெற்றமையால் அவன் விருதுகள் யாவும் இங்குள்ள வீரன் பெற்றமையால், “ விருதுபட்டி” விருது-விருதுகள்பட்டி-சிறிய கிராமம், விருதுபட்டி என்றும் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
திருமங்கலம் ஸ்ரீ பெரியகாத்தவராயன் மற்றும் ஸ்ரீகாமாட்சியம்மன் கோவில் கல்வெட்டில் விருதுவெற்றி என்றும் கூறப்படுகிறது.
கந்தசாமி கவிராயர் தம் “தெப்பக்குளச்சிந்து” வில் “விருதூர்” மற்றும்“விருதையூர்” எனவும் குறிப்பிடலாம்.
விருதுகெட்டி, விருதுவெட்டி, பரிசுபட்டி, விருதை, விருதையம்பதி, வெயிலுவந்தாள் பட்டிணம் என்றும் கூறப்படுகிறது.
6-4-1923 முதல் “விருதுநகர்” என்று அழைக்கப்படுகிறது.
விருதுநகர் என்றால் வணிகம் என்று சொல்லும் கொள்ளும் அளவிற்கு புகழ் பெற்றது.
"Virudhunagar Produces Nothing But Controls Everything" என்று சிறப்பும் உண்டு.
தகவல் மற்றும் படங்கள் உதவி - MYVNR